ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதிக்கு இந்திய ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் முன்னேறி உள்ளனர்.
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்:
ஜெர்மனியில் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் மற்றும் மகளிருக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந் ஜோடி, சீன வீராங்கனைகளான தைபேயின் ஹ்சு யா சிங் மற்றும் லின் வான் சிங் ஜோடியை எதிர்த்து போட்டியிட்டனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதில், இந்திய ஜோடி தனது முதல் செட்டை 21-17 என்று கைப்பற்றிய நிலையில், 2வது செட்டை 18-21 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதனால், வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் 3 வது ஆட்டத்திற்கு போட்டி நகர்ந்து. இந்த ஆட்டத்தில் வேகம் காட்டிய இந்திய ஜோடி 21-8 என்ற கணக்கில் வென்றதுடன், போட்டியையும் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினர்.
வாழ்த்து மழையில் நனையும் கிங் விராட் கோஹ்லி…, சொன்ன கதையும் சொல்ல மறந்த கதையும்!!
இது போன்று, ஆடவர் இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, இங்கிலாந்தின் பென் லேன் மற்றும் சீன் வெண்டிடம் 17-21, 14-21 என்ற முதல் இரு செட்களை இழந்து அரையிறுதி வாய்ப்பையும் தவற விட்டனர். இதையடுத்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், இந்தோனேசியாவின் ஜொனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டு 21-13 மற்றும் 21-19 என்ற செட் கணக்கில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். இதன் மூலம், அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.