கோவில் திருவிழா போன்ற முக்கிய நிகழ்வுகளில் நடத்தப்படும் கரகாட்ட நிகழ்ச்சியில் பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் குறித்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக வெளியிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா தாக்கம் காரணமாக பண்டிகை மற்றும் விழாக்கள் எதுவும் சிறப்பாக நடத்தப்படவில்லை. கடந்த ஒரு ஆண்டாக தான், பொதுமக்கள் பங்கேற்புடன் பண்டிகைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் தமிழர்களின் பாரம்பரியமான கரகாட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான இந்த கரகாட்டம், கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமாக மாறிவிட்டது. அநாகரிக உடை, ஆபாச வசனம் என இந்த கலை தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் மதுரை மேலப்பட்டியில் உள்ள அம்மன் கோவிலில் இந்த கரகாட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – நீட் தேர்வுக்காக அரசின் அதிரடி ஆக்சன்! பெற்றோர் குஷி!!
இது குறித்து உத்தரவிட்ட நீதிமன்றம், கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் கூடாது என உத்தரவிட்டார். இரட்டை அர்த்த வசனமோ, பாடலோ கூடாது எனவும், கலைஞர்கள் நாகரிகமான உடை அணிந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பது குறித்த பல்வேறு நிபந்தனைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்ததுள்ளது.