தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பெரும்பாலானோர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை மசோதா சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. அதன்படி தடையை மீறி கேம் விளையாடுபவர்களுக்கு, அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்க ஒழுங்குமுறை ஆணையம் நியமிக்கப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
தற்போது இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முகமது நசிமுதீன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதேபோல் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எம்.சி.சாரங்கன், ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் சி.செல்லப்பன் உள்ளிட்டோர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.