தமிழகத்தில், உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளி கல்வித் துறை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், பொதுத் தேர்வுகான அட்டவணையை நவம்பர் மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குநர் நரேஷ் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த சுற்றறிக்கையில், ஒரு பள்ளியில் போதிய எண்ணிக்கையில்லா மாணவர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை இல்லை என்றால் வேறொரு பள்ளிக்கு சென்று பொதுத் தேர்வு எழுத்தும் வசதியை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த வசதியை தற்போது எளிதாக்கும் வகையில், தேர்வு மையங்களை மாற்றும் கோரிக்கைகள் இருந்தால், அது தொடர்பான ஆவணங்கள் உடன் வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூரித்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசு தேர்வுகள் இயக்க முகவரிக்கும் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கான ஒழுங்குமுறை ஆணையம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!