தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி, வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
ஊழியர்கள் அதிரடி:
தமிழகத்தில், பங்களிப்பு பென்ஷன் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் நிலவி வரும் நிதிச் சூழலை காரணம் காட்டி, அரசு இதில் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் அரசின் இந்த செயலை கண்டித்து, CPS ஒழிப்பு இயக்க ஊழியர்கள் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதாவது வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் மிகப் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடு., மத்திய அரசின் மாஸ்டர் பிளான்! மறந்தும் இதை செஞ்சுடாதீங்க!!
இதில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்த உள்ளனர். தொடரும் இதுபோன்ற போராட்டங்களால், அரசு இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.