நவீன யுகத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு அப்டேட்களை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது. சில நேரங்களில் இதில் இருக்கும் சிக்கல்கள் பற்றி அறியாமல் மக்கள் இன்டர்நெட் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் தகவல்கள் திருட்டு, கொள்ளை, மோசடி போன்ற சட்ட விரோத செயல்கள் நடைபெற எளிதில் வழி கிடைத்து விடுகிறது. எனவே நாளுக்கு நாள் பல்வேறு தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து வருகிறது.
Union Budget 2023 : ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்! Work from home பணியாளர்களுக்கு துட்டு கொட்ட போகுது!!
அந்த வகையில், இந்த சமூக வலைதளங்களின் செயல்பாடுகளை கண்டறிய மூன்று குழுக்களை பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற 2 அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த குழுக்கள் இணைய அடிப்படையிலான மக்களின் புகார்களை ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என தகவல் தெரிவித்துள்ளனர்.