இன்னும் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியாக உள்ளது.
வெளியான அறிவிப்பு:
வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் மத்திய அரசின் இறுதி பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான இறுதி கட்ட பணிகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்முரமாக இறங்கி உள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், சிறு குறு தொழில் புரிவோர் மற்றும் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் அனைவருக்கும் ஜாக்பாட் அளிக்கும் விதமாக பல அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அந்த வகையில், ஐடி ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக மத்திய பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியாக உள்ளது. அதாவது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு Allowance வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
பட்ஜெட் 2023 : விவசாயிகளுக்கு பம்பர் லாட்டரி., PM கிசான் உதவித்தொகை இவ்ளோ உயர போகுதா?
அது மட்டும் இல்லாமல் இவர்களுக்கு வருமான வரியில் மிகப்பெரிய சலுகைகள் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே மாத சம்பளம் பெறுவோரின் வருமான வரி விலக்கை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, Work form home ஊழியர்களுக்கு பல ஜாக்பாட் அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.