
தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை திட்டத்திற்காக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பலரும் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருவதாகவும், பொங்கல் பண்டிகைக்குள் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தொடர்ந்து பேசுகையில், “ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க பயனாளர்களின் கருவிழி பதிவு மூலம் உணவுப் பொருட்களை வழங்க இருக்கிறோம். 2024 மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத ரேஷன் கடைகளில் இந்த திட்டம் அமலுக்கு வரும். 9 மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படும்.” என கூறியதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் சிக்கல்.., வெளியான முக்கிய தகவல்!!!