தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு தொடர்பு வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் அரசு ஊழியர்களின் கல்வி தகுதிக்கேற்ப அவர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. அதாவது அரசு ஊழியர்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.25,000, பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு படித்தவருக்கு ரூ.20000, பட்டப்படிப்பு அல்லது பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் ஊதிய உயர்வாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
சில வாரங்களுக்கு முன்பு இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஊக்கத்தொகையானது ஒரே ஒரு முறை மட்டும் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அரசு ஊழியர்கள் நிபந்தனைகளை தளர்த்தி பனிக்காலம் முழுவதும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.