இந்திய தலைநகர் டெல்லியில், தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது காற்று மாசுபாடு அடைந்து வருகிறது. இதனால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இருக்க, கடந்த நவம்பர் 3 & 4 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்தார்.
Enewz Tamil WhatsApp Channel
இருப்பினும் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அடைந்து வருவதால், 10, 12ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு நவம்பர் 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, காற்று மாசு மோசமடைந்து வருவதால் இந்த பருவநிலை மாற்றம் நவம்பர் 13 முதல் நவம்பர் 20 வரை தொடரும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், விடுமுறை நீடிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.