தமிழகத்தில், 2000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் புகழ்பெற்ற நிறுவனத்துடன் கையெழுத்து ஆகியுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்:
தமிழகத்தில் கடந்த கொரோனா காலகட்டத்திற்கு பின், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. அரசின் சார்பாக, தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, வேலை வாய்ப்புகள் பெருகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் ஏற்றுமதி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் பல புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 24 க்கும் மேற்பட்ட தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மதுரை மக்களே தயாராகுங்க., சித்திரை திருவிழா ஸ்டார்ட்., முழு விவரத்தை வெளியிட்ட கோவில் நிர்வாகம்!!!
அந்த வகையில், தற்போது புதிதாக 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய ஒப்பந்தம் என்று தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற நிஸான் என்ற நிறுவனத்துடன், தமிழக அரசு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் கையெழுத்திட்டு உள்ளது. இதனால், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது.