தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு :
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா, கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கவனித்து வருகிறார். இதற்கான இறுதி கட்டப் பிரச்சாரங்களில், தமிழக கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளது. தற்போது இந்த இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு, வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2000 வேலைவாய்ப்புகள் ரெடி., புகழ்பெற்ற நிறுவனத்துடன் அரசு புதிய ஒப்பந்தம்!!
இந்த நாளில், பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் முழுமையாக இயங்காது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழக அரசு தம் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.