பொதுவாக மக்களுக்கு, போக்குவரத்தில் ரயில் பயணம் என்றால் மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கும். இதில் குறிப்பாக மலை பகுதிகளில் ரயில் பயணம் செய்வதை விரும்பாதவர்கள் மிக குறைவே. அந்த வகையில், மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் இடையிலான ரயில் போக்குவரத்து சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமாக உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்ததால், மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 10 நாட்களாக தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் இப்பணிகள் நிறைவடைந்து. இதன் காரணமாக, இன்று (நவம்பர் 19) முதல் மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் பகுதியில் ரயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது.