வைரஸ் பரவல் எதிரொலி – தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்? மருத்துவத்துறை செயலாளர் விளக்கம்!!

0
வைரஸ் பரவல் எதிரொலி - தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்? மருத்துவத்துறை செயலாளர் அதிரடி விளக்கம்!!
வைரஸ் பரவல் எதிரொலி - தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்? மருத்துவத்துறை செயலாளர் அதிரடி விளக்கம்!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொற்று, அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த, முக்கிய அறிவிப்பு ஒன்றை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்துள்ளார்.

அதிரடி விளக்கம்:

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் குறைந்து வந்த வைரஸ் பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில், நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது குறித்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு இல்லை, மீதமுள்ள 9 மாவட்டங்களில் மட்டுமே, தொற்று அதிகமாக உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1000 பேரில் 3 நபர்களுக்கு மட்டுமே தொற்று பதிவாகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் முக கவசம் அணிதல், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுதல் ஆகியவற்றை தவறாது கடைப் பிடிக்க வேண்டும் என்றும், முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு தற்போது எந்த அவசியமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு, பொது மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here