தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை ஒடுக்க பிரதமர் மோடி ராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமருக்கு கோரிக்கை :
தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக, பாஜகவின் தலைமை அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இன்று காலை குமரி மற்றும் கோவை மாவட்ட பாஜக அலுவலகங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இது மட்டுமல்லாமல், திமுக எம்பி ஆ.ராசா பேசியதை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அப்போது போராட்டக்காரர்களால் அவரது உருவ பொம்மை எரிக்க முயற்சிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறை இதனை தடுத்து போராட்டக்காரர்களை கைது செய்தனர். இது குறித்து பேசிய அர்ஜுன் சம்பத், போராட்டக்காரர்களை ஒடுக்குவது முறையா? வன்முறைக்காரர்களை எப்போது கைது செய்வீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சி – இன்னும் 9 மாசத்துல அதுக்கும் ஆப்பு! பகீர் அறிக்கை!!
அது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் நடக்கும், வன்முறையை கட்டுப்படுத்த பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு ராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.