இந்தியா அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து சரிந்து வருவதாகவும், இன்னும் 9 மாதத்திற்குள் அதற்கான தொகையும் தீர்ந்து போகும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சரியும் பொருளாதாரம் :
இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு கடந்த ஆண்டு 642 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் முதல், இந்த செலாவணி இருப்பு பெருமளவு சரிந்து விட்டது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல் படி, செப்டம்பர் 16ஆம் தேதி படி அன்னிய செலவாணி கையிருப்பு 545 பில்லியன் டாலர் மட்டுமே. தற்போது நம் நாட்டின் இந்த கையிருப்பை வைத்து, வெறும் 9 மாதங்களுக்கு மட்டுமே பொருட்களை இறக்குமதி செய்ய முடியும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் பிறகு, நம் நாட்டின் மாத இறக்குமதி செலவுக்கான 63 பில்லியன் டாலர் என்பது கேள்விக்குறியே. நம் அண்டை நாடான இலங்கையில், பொருளாதார சீரழிவு காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் எழுந்து வருகிறது. இதே நிலை இந்தியாவில் தொடராமல் இருக்க, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.