பிரபல நடிகை நயன்தாரா இப்பொழுது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு ஜாலியாக ஹனிமூனை என்ஜாய் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரை பற்றிய செய்திகள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதாகவும், த்ரிஷா அந்த இடத்தை பிடித்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் நயன்தாரா இதனை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. தற்போது வரை பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் இவர்களின் திருமண வீடியோ நெட்பிலிக்ஸில் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று ப்ரோமோ வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பியது. இப்படி இருக்க இப்பொழுது நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே எப்படி காதல் மலர்ந்தது என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும்போதே விக்னேஷ் சிவனின் டெடிகேஷன் லெவல் நயன்தாராவிற்கு பிடித்துப்போனதாம். அப்பொழுதெல்லாம் நண்பர்களாக தான் இருந்துள்ளார்கள். நாளடைவில் அதிகமாக பேசி பழகியுள்ளனர். அதன் பிறகு விக்னேஷ் சிவன் தான் காதலை சொல்லியுள்ளார்.
பிக்பாஸ் 6 ல் நடந்த மோசமான மாற்றம் – இனி ஒருத்தர் பார்க்க மாட்டாங்க! மொத்தமும் நாசமா போச்சு!!
நயனும் இப்படி நல்ல பையன் கிடைக்கிறது கஷ்டம் என்று சொல்லி பச்சைக் கொடி காட்டியுள்ளார். அதன் பிறகு சினிமாவில் இன்னும் சாதித்த பிறகு தான் திருமணம் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியுள்ளார் நயன்தாரா. இதனால் தான் 5 வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்துள்ளனர்.