தமிழகத்தில் 49 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து அரசின் முதன்மை செயலாளர் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சில நாட்களுக்கு முன், ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது தமிழகத்தில் மேலும் சில ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் மற்றும் சில அதிகாரிகளை பதிவு உயர்வு செய்து தமிழக அரசு தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி அரசு வெளியிட்ட தகவலின் அடிப்படையில் நெல்லை மாநகர காவல் ஆணையராக, செந்தாமரை கண்ணன்,பிரதீப் குமார், சுதாகர் ஆகியோருக்கு டி.ஐ.ஜி. பதவியில் இருந்து ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.கார்த்திகே
மேலும் மயிலாப்பூர் துணை ஆணையராக திஷா மிட்டலும், வடக்கு மண்டல இணை ஆணையராக லலிதா லட்சுமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே ஐ.ஜி.,யாக சுமித் சரண், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக சந்தோஷ் குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!