இலங்கையில் சக்தி வாய்ந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் 5000 ரூபாய் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இன்று முதல் ரூ.5,000 கொரோனா நிவாரணம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அண்டைநாடான இலங்கையில் தற்போது கண்றியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ், அதிக சக்தி வாய்ந்தது எனவும், வேகமாக பரவக்கூடியது என்றும் இலங்கை நோய் எதிர்ப்புத்துறை தலைவர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இதுவரை மொத்தம் 1,89,241 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,527 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் நிலைமை மற்றும் பயணத்தடையை கருத்திற் கொண்டு, வருமானம் இழந்து தவிக்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோத்தர்கள் குழுவாக இணைந்து வருமானம் பெற முடியாமல் இருக்கும் குடும்பங்களுக்கு இந்த பணத்தை வழங்குவார் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதற்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!