சமீபகாலமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஃப்ளூ காய்ச்சல் பாதிப்புகளால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கூட இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால், சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து இருந்தார். இந்த சூழலில் தமிழக சுகாதாரத்துறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது “கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெரும்பாலானோர்க்கு ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தவில்லை. அதேபோல் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.” என அதிர்ச்சி தகவலை விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் தொடர் விடுமுறை.., பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!