தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 685 ஓட்டுநர், நடத்துனர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 18ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ww.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் வரவேற்கப்பட்டது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, செய்முறை மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி வருகிற நவம்பர் 19ஆம் தேதி எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் 10 மையங்களில் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கான அனுமதி சீட்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் ஆன்லைனில் விநியோகிக்க உள்ளனர். அதேபோல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, அனுமதி சீட்டு தபாலில் அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.