சமீபகாலமாக தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் மற்றும் செவிலியர் தட்டுப்பாடு இருப்பதால், நோயாளிகள் பலரும் பல இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது,. இதனை கருத்தில் கொண்டு 1021 மருத்துவர்கள் மற்றும் 2,242 செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி 2024 ஜனவரி முதல் வாரத்தில் மருத்துவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழக அரசு மருத்துவமனைகளில், அடுத்த 10 நாட்களில் 1,021 மருத்துவர்கள் மற்றும் 983 மருந்தாளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.