தமிழக அரசானது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக அரசானது இந்த திட்டம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்களுக்கு வங்கி கணக்கு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால், பல பெண்கள் தங்களுக்கென தனியாக வங்கி கணக்கு வைத்திருக்கவில்லை. இத்தகைய பிரச்சனையை தீர்ப்பதற்காக, முகாமிற்கு வரும் பெண்கள் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களுடன் 2 போட்டோக்கள், ஆதார் கார்டு ஆகியவற்றை எடுத்து சென்றால் அந்த குறிப்பிட்ட நபருக்கு புதிய வங்கி கணக்கை திறக்க அரசு வழிவகை செய்துள்ளது. இதனால், வங்கி கணக்கை தொடங்க இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் வங்கிக்கு அலைய வேண்டியது இல்லை.