
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை இலவசமாகவும், ஒரு கிலோ சர்க்கரை 25 ரூபாய்க்கும், துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு, ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்கள் மிகவும் பயன் அடைந்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விற்பனைக்கான காலாவகசம் இம் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் துவரம் பருப்பு விற்பனை செய்வதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக மக்களே…, நாளை முதல் இந்த சிறப்பு சேவையை இயக்கம்…, போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!!