தமிழக போக்குவரத்து துறையானது மக்களின் நலனுக்காகவும், சாலை போக்குவரத்தில் ஏற்படக்கூடும் கூட்ட நெரிசலை கட்டு படுத்துவதற்காகவும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், நாளை (செப்டம்பர் 8) முதல் வரும் ஞாயிறு கிழமை (செப்டம்பர் 10) வரையிலான வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகளின் வசதிகளுக்காக, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களான மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை முதல் கூடுதலாக 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பெங்களூரில் இருந்து தமிழகத்தின் பிற இடங்களுக்கு செல்வதற்கு 300 பேருந்துகளும் என மொத்தம் 600 பேருந்துகள் நாளை முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.