ஐபிஎல் லீக் தொடரை போல, உத்தரபிரதேசத்தில் டி20 லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் நட்சத்திர வீரர்கள் பலர் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், காசி ருத்ரர்கள் அணியை எதிர்த்து இந்திய நட்சத்திரம் புவனேஸ்வரின் நொய்டா சூப்பர் கிங்ஸ் (NSK) அணி மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த காசி ருத்ரர்கள் அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் குவித்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய நொய்டா சூப்பர் கிங்ஸ் அணியும் 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுக்க போட்டியானது டிராவாக மாறியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் விளைவால், சூப்பர் ஓவரை நோக்கி போட்டி நகர்ந்தது. இதில், நொய்டா சூப்பர் கிங்ஸ் அணி ஒரே ஓவரில் 19 ரன்கள் எடுத்திருந்தது. இந்த இலக்கை துரத்த களமிறங்கிய காசி ருத்ரர்கள் அணியின் நிதிஷ் ராணா (10) மற்றும் ஓஷோ மோகன் (1) புவனேஸ்வரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இதனால், சூப்பர் ஓவர் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
IND vs PAK: “நாங்க எப்பவும் ரெடி தான்”…, இந்திய அணிக்கு சவால் விடும் பாகிஸ்தான் கேப்டன்!!