உணவகங்களில் பார்சலுக்கு அனுமதி – முதல்வர் அறிவிப்பு !!!

0

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலையின் பலி எண்ணிக்கையால் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கு விதிகளை கடுமையாக்கி வருகின்றன. தற்போது தமிழகத்திலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ள நிலையில் உணவகங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்படும் .

உணவகங்களில் பார்சலுக்கு அனுமதி:

தற்போது கொரோனா 2ம் அலையில் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.இந்த ஊரடங்கு நாளை மறுநாள் காலை 4 மணி உடன் முடிவுக்கு வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். தற்போது தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிகப்பட்டுள்ளது .

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உணவகங்கள் காலை 6-10, மதியம் 12-3, மாலை 6-9 மணி வரை பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடக்கூடாது என்பதற்காக கட்டுப்பாடுகளுடன் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here