தமிழகத்தில் நாளை(14.04.2022) முதல் (17.04.2022) வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
படுக்கையறையில் கால்லை மடக்கி காட்டிய நடிகை அஞ்சலி – பிரஷரில் துடித்த இளசுகள்!!
மக்கள் நிம்மதி:
தமிழகத்தில் சித்திரை திருநாள், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் திருநாள் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு (14.04.2022) முதல் (17.04.2022) வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதனால், பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இதனால், சென்னை கோயம்பேட்டில் இருந்து கூடுதலாக 1200 பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மட்டுமல்லாது, மதுரை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்காக சென்ற பொதுமக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல், திரும்பி வருவதற்கு ஏதுவாக 17ஆம் தேதி அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்து இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்