தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 30 நாட்களுக்குள் இணைப்பு வழங்க மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் அலுவலகத்தில் மின் மீட்டர் பற்றாக்குறை காரணமாக, புதிய இணைப்பு வழங்க தாமதமாகி வருவதாக அதிகாரிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மின்வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து, நுகர்வோர்களே கொள்முதல் செய்ய, மின் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி தகுதியான விற்பனை நிறுவனங்களிடமிருந்து ஒரு முனை மீட்டரை ரூ.970-க்கும், மும்முனை மீட்டரை ரூ.2,610-க்கும் கொள்முதல் செய்து கொள்ளலாம். பின்னர் அது தொடர்பாக மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் தெரிவித்தால் போதும், பொருத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். நுகர்வோர்களிடமிருந்து மீட்டா் வைப்புத்தொகை வசூலிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளனா்.