கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. தற்போது மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (செப்டம்பர் 20) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
குறிப்பாக மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் காலை நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், மாலை நேரத்தில் 40 சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு மகளிருக்கு மீண்டும் ஜாக்பாட் திட்டம்., சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த மசோதா நிறைவேற்றம்?