குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள் மட்டுமல்லாமல் குடியிருப்புகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த சூழலில் பாதிப்பு அதிகம் உள்ள திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 19) பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதேபோல் கன்னியாகுமரி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.