தமிழகத்தில் கொரோனா பரவலின் நான்காவது அலை, ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் உச்சம் தொடும் என்பதால், மீண்டும் ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து நிபுணர் குழுவுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி உள்ளது.
முக்கிய ஆலோசனை:
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. இந்தியாவில் இந்த பாதிப்பு குறைந்தாலும், சீனா உள்ளிட்ட பிற நாடுகளில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவிலும் விரைவில் வைரஸ் பாதிப்பு உருவாகலாம் என அஞ்சப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் ஜூன் அல்லது ஜூலை மாதம், கொரோனா பரவலின் நான்காவது அலை உச்சம் தொடும் என மருத்துவ நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இது சம்பந்தமான, முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று முதல்வர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது, தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் எனவும், தொற்று பரவலின் தாக்கத்தை வைத்தும், நிபுணர் குழுவின் அறிக்கையை வைத்தும் மட்டுமே தமிழகத்தில் மீண்டும், முழு ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்