கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா, சினிமா ஷூட்டிங் காரணமாக, ஒரு வாரத்திற்கு தனது காதலர் விக்னேஷ் சிவனை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரியும் ஜோடி:
கோலிவுட் சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். கடந்த 7 வருட காலமாக காதலித்து வரும் இவர்கள் குறித்த புது தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகின்றது. அதாவது, இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் 62 பட வேலைகளில் பிஸியாக உள்ளார்.
அதேபோல் நயன்தாராவும், டோலிவுட், பாலிவுட் என நடித்து வருகிறார். இந்த நிலையில், ஹிந்தி பட சூட்டிங் வேலையாக, நயன்தாரா ஒரு வாரம் மும்பை செல்ல இருப்பதால், அவரைப் பார்க்க முடியாத சோகத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மூழ்கியுள்ளாராம். இருவரும் தங்கள் வேலைகளில் தற்போது ரொம்ப பிசியாக இருப்பதால், இப்போதைக்கு இவர்கள் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்