தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது – ஒரே நாளில் 6,988 பேருக்கு தொற்று!!

0
Corona
Corona

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி உள்ளது. மேலும் ஒரே நாளில் 7,758 பேர் குணமடைந்து உள்ளனர்.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தற்போது 52,273 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 64,315 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 23 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 6,988 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மாநிலம் கண்ட புதிய வழக்குகளில் இது மிகப்பெரிய ஒற்றை நாள் ஸ்பைக் ஆகும். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுவரை 2,06,737 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் 1,51,055 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 3,409 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 7,758 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 89 பேர் உயிரிழந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here