தமிழ் நாட்டில் இன்று 21,000 ஐ தாண்டியது கொரோனா தொற்று !!!
தமிழ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,228 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19,112 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.
சென்னையில் அதிகபட்சமாக இன்று 6228 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மாநிலத்தில் 29.3% பாதிப்பாகும்.
இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1608 பேர், கோவை மாவட்டத்தில் 1509 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 1152 பேர், மதுரை மாவட்டத்தில் 787 பேர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 594 பேர், திருச்சி மாவட்டத்தில் 440 பேர், திருநெல்வேலி மாவட்டத்தில் 790 பேர், திருப்பூர் மாவட்டத்தில் 494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 27ம் தேதி 16,000 மேல் இருந்த கொரோனா தொற்று, தற்போது 21,000 ஐ தாண்டியுள்ளது. 1,34,112 பேருக்கு பரிசோதனை செய்ததில் 21,228 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 144 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை 14,612 ஆக உயர்ந்துள்ளது.