விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 5வது சீசன் ஆரம்பிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கு மத்தியில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுமா?? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி பல பேருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பிக் பாஸ் சக்கைபோடு போட்டு வருகிறது. இதில் 100 நாட்கள் எப்படி அனைவரிடம் நடந்து கொள்கின்றனர், இதனால் ஏற்படும் சண்டைகள் போன்றவற்றால் தான் டிஆர்பி ரேட்டிங்கே அதிகரிக்கும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆரம்பத்தில் எவ்வளவு தான் பொறுமையாக இருப்பது போல நடித்தாலும் நாளடைவில் தாக்கு பிடிப்பது கடினம். பலர் சுவர் ஏறி குதித்தும் வெளியே சென்றுள்ளனர். ஆனால் ஒவ்வொரு சீசனிலும் மக்கள் மத்தியில் யாராவது ஒரு பிரபலமடைந்து விடுவர். அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் முறையை பொறுத்து தான். தமிழை பொறுத்தவரை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரைக்கும் தான் அவர்களுக்கு மவுசு.
நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்து இருக்கீங்களா?? வைரலாகும் புகைப்படம்!!
முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ் இப்பொழுது என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை. ரித்விகாவுக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவும் இல்லை. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 கொரோனா காலம் என்பதால் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. இதனால் எல்லா விழாக்களையும் வீட்டிலேயே கொண்டாடும் நிலை ஏற்பட்டது.
அப்படி இருக்க சீசன் 5 ஜூன் மாதத்திலேயே ஆரம்பிக்க இருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. அப்படி இருக்க தற்போது இந்த சீசன் நடைபெறுமா?? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இந்த சீசனை சிம்பு தான் தொகுத்து வழங்க போகிறார் என்ற செய்தியும் இணையத்தில் உலா வந்தது.
அப்படி இருக்க தற்போது கமல் தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா?? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் நீண்ட நாட்களாகவே கமல் தனது பிரச்சாரத்தை பிக் பாஸிலும் செய்து வந்தார். அப்படி இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிப்பது, அதனை யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.