தமிழகத்தின் கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் சென்னையில் நேற்று (டிசம்பர் 3) இரவு முதல் பலத்த காற்று மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் கனமழை காரணமாக தரையில் இறங்கியது. இந்த கட்டிடத்திற்குள் 10 க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாகவும், 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், பலத்த மழை காரணமாக வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலை வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை முழுவதும் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மிக்ஜம் புயல் எதிரொலி.., பூமிக்குள் புதைந்த அடுக்குமாடி கட்டிடம்.., சிக்கி தவிக்கும் மக்கள்!!!