தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளம் என வெளுத்து வாங்கியது. இதனால், பள்ளிகளுக்கு மழை வெள்ளம் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, விடுமுறையை ஈடு செய்யும் வகையில் கல்வித்துறை அமைச்சர் சனிக்கிழமை தோறும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனால், நாளை (பிப்ரவரி 3) சனிக்கிழமை சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், NMMS தேர்வு நடைபெறுவதையொட்டி நாளை வேலை நாள் ரத்து செய்யப்பட்டு சென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும், நாளை நடைபெற இருந்த திருப்புதல் தேர்வுகள் பிப்ரவரி 10ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.