தமிழகத்தில் அரசு பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் பசியின்றி கல்வி கற்பதற்காக காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தினார். முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்பட்ட இந்த திட்டம், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் அரசின் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று வரும், அரசு உதவி பெறும் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு இந்த காலை உணவு திட்டம் வழங்கப்படவில்லை.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த திட்டம் அரசு உதவி பெறும் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் இது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரையிலும் வெளி வரவில்லை. இதனால், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகள் நடத்தும் நிர்வாகிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் காலை உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என அரசு உதவி பெறும் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 29) இந்த 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை., மாணவர்கள் குஷி!!!