தமிழக பள்ளி மாணவர்களே.., இது புதிதாக உங்களுக்கு வழங்கப்படும்.., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

0
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகள் மற்றும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் புத்தகங்கள் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது தற்போது அரையாண்டு தேர்வுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மீட்பு பணி முடிவடைந்து விட்டது. இதனால் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாளை புது புத்தகங்கள் வழங்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here