தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பெய்ய போகும் கனமழை குறித்து சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய பகுதிகளில் ஒரு இடங்களில் கனமழை பெய்ய கூடும். மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.