கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஓரிரு இடங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அடுத்த சில மணி நேரத்தில் மழைப்பொழிவு உள்ள மாவட்டங்களை அறிவித்துள்ளனர்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில், இன்னும் சில நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.