தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு துறைகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், ஒரு சில நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதலுக்கு உட்பட்டு வருகிறார்கள். அதன்படி 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று (டிச.14) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த விவரம்:
- சென்னை போக்குவரத்து துணை ஆணையராக IPS பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை சட்ட ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக IPS தர்மராஜன் நியமனம்.
- மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவு IG-ஆக தமிழ் சந்திரன் நியமனம்.
- மதுரை தெற்கு துணை ஆணையராக IPS பாலாஜி நியமனம்.
- திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கோவை சிவில் சப்ளை சிஐடி பிரிவின் எஸ்.பி.-ஆக சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.-ஆக சமய் சிங் மீனா நியமனம்.
- சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.-ஆக மகேஷ்வர் தயாள் நியமனம்.
- TANGEDCO ஐ.ஜி.-ஆக பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக ADGP கல்பனா நாயக் நியமனம்.
- தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பாளராக அம்ரேஷ் புஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.