திருப்பதிக்கு போறீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க…, திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு!!

0
திருப்பதிக்கு போறீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க..., திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு!!
கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழாவில், சொர்க்க வாசல் திறக்க பட்டவுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.
இதையடுத்து, வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையானை காண ரூ.300 கட்டணம் மற்றும் இலவச டிக்கெட்டுகள் என அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இதனால், திருமலை தேவஸ்தானம் வரும் ஜனவரி 1 ஆம் தேதி வரை டிக்கெட் இல்லாத பக்தர்கள் சன்னிதானத்திற்கு வருவதற்கான திட்டமிடலை நிறுத்தி வையுங்கள் என அறிவுறுத்தி உள்ளது. மேலும், வரும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் தினசரி சர்வ தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் வழக்கம் போல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here