தமிழகத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ரூ.6000 நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் இந்த நிவாரண தொகை டோக்கன் மூலம் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி நேற்று தெரிவித்தார். இந்நிலையில் மற்றொரு அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதாவது டோக்கன்களை ரேஷன் கடைகளில் வழங்கினால் தேவையற்ற கூட்ட நெரிசல் ஏற்படும். இதனால் இதை தடுக்க கோவிட் காலகட்டத்தில் எப்படி பொருட்கள் வீடு வீடாக வழங்கப்பட்டதோ அதேபோன்றுதான் நிவாரணத் தொகைகாண டோக்கன் வீடு வீடாக அதிகாரிகள் மூலம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் தேவையின்றி மக்கள் யாரும் ரேஷன் கடைகளில் கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.