தமிழக பள்ளி மாணவர்களே…, இனி சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்…, அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
தமிழக பள்ளி மாணவர்களே..., இனி சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்..., அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் மழையில் நனைந்து வீணானது. இதனால், மாணவர்களின் நலன் கருதி அரையாண்டுத் தேர்வுகள் நாளை (டிசம்பர் 13) ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், புத்தகங்கள் இல்ல மாணவர்களுக்கு அவர்களது பள்ளிகள் வாயிலாக புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கி உள்ளார். அதாவது, அவசர காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் பொழுது அதனை ஈடு செய்ய அடுத்தடுத்து வரக்கூடிய சனிக்கிழமைகளில் பள்ளிகளை வைத்து தான் அந்த விடுமுறையை ஈடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here