சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவறவிடாமல் வெள்ளித்திரையில் நடிக்கும் அளவுக்கு சென்றவர் தான் விஜே சித்ரா. பல சேனல்களில் தொகுப்பாளராக வேலை பார்த்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். அந்த சீரியல் மூலம் குடும்பத்தில் ஒருவராக இடம் பிடித்த சித்ரா, ஹேமந்த் என்பவரை காதலித்து வந்தார். நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணம் வரை சென்ற நிலையில்,எதிர்பாராத விதமாக சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் சாவுக்கு ஹேமந்த் தான் காரணம் என்று சித்ரா பெற்றோர்கள் புகார் கொடுத்த நிலையில் ஹேமந்தை காவல்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று வெளியே வந்தார். கிட்டத்தட்ட சித்ரா இறந்து 3 வருடம் ஆன நிலையில் ஹேமந்த் வீட்டில் உள்ள வேலைகளை பார்த்து வருகிறாராம். சைடில் பிசினஸ் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது சித்ரா உடைய இறப்பு புரியாத புதிராக இருப்பது குறிப்பிடத்தக்கது.