டிக் டாக் விபரீதம் – கொரோனா மருந்து என நம்பி உமத்தங்காயை ஜூஸ் செய்து குடித்த 10 பேருக்கு சிகிச்சை.!

0

கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் அதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனாவை விட அதனை பற்றிய வதந்திகளே அதிகம் பரவி வருகின்றன. மேலும் தற்போது டிக் டாகில் கொரோனாவிற்கு மருந்து என வதந்தி பரவியதை உண்மை என்று நம்பி உமத்தங்காயை ஜூஸ் செய்து குடித்ததில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிக் டாக்

image

கொரோனா வைரஸிலிருந்து தன்னை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் வீட்டு வைத்தியங்களுடன் கூடிய டிக் டாக் வீடியோ இரண்டு குடும்பங்களை மருத்துவமனையில் இறக்கியுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இந்த இரண்டு குடும்பங்களும் டிக் டாகில் உள்ள கொரோனா மருந்து வீடியோ ஒன்றை பார்த்துள்ளனர்.

மருத்துவ குணங்கள் நிறைந்த ஊமத்தை ...

அதில் உமத்தங்காயை ஜூஸ் செய்து குடித்தால் சரியாகி விடும் என்ற வீடியோ பரவி உள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினர் அதனை ஜூஸ் செய்து குடித்துள்ளனர். சிறிது நேரத்திலேயே வாந்தி மயக்கம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது வீடு திரும்பி உள்ளனர். இதை அடுத்து கொரோனா மருந்து என எதையும் நம்பி உட்கொள்ள வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here