மதுவை விற்க அனுமதி வேண்டும் அடம்பிடிக்கும் மதுபான நிறுவனங்கள் – மத்திய அரசிடம் கோரிக்கை..!

0

இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளதை அடுத்து நாட்டின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலத்திலும் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி கொடுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

முக்கிய நிறுவனங்கள் கோரிக்கை..!

டியாஜியோ இந்தியா, பெர்நாட் ரிகார்டு, பீம் சன்டாரி, பகார்டி, ரெமி மார்டின் மற்றும் இதர மதுபான இணைந்து, ஊரடங்கு காலத்தில் தினமும் சில மணிநேரம் மட்டும் மதுபானங்களை விற்பனை செய்ய மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

வருவாய்..!

ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயில் 15 முதல் 30 சதவீத வருவாய் மதுபான விற்பனை மூலம் கிடைக்கிறது. மார்ச் 30 உடன் முடிந்த 2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் மாநில அரசுகள் மது விற்பனை மூலம் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது.

மக்களின் நிலை..!

மதுபானம் கிடைக்காத காரணத்தால் மக்கள் தற்போது நிலையான மனநிலையில் இல்லை. இதனால் பலர் போதைக்காகப் பல விபரீத முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனாலேயே பலர் மரணம் அடைந்துள்ளது

உணவு பாதுகாப்பு..!

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உணவு இருப்பதைப் போல் 2006 உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் மதுபானமும் சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது ஊரடங்கு இருக்கும் காரணத்தால் மதுபானம் விற்பனை செய்யப்படவில்லை. இதனால் நாட்டின் பல பகுதிகளில் கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் தற்போது மேற்கு வங்காளம் மட்டும் மதுபானங்களை மதியம் 2 மணி முதல் 5 மணி வரையில் ஹோம் டெலிவரி செய்ய அனுமதி கொடுத்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here