தமிழகத்தில் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ஏப்ரல் 1ம் தேதியுடன் பொதுத் தேர்வுகள் முடிவடைய உள்ளது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி ஆங்கில மொழிப்பாட தேர்வு நடைபெற்றது. இதற்கான வினாத்தாளில் மாணவர்கள் குழப்பம் அடையும் வகையில் மூன்று கேள்விகள் இடம் பெற்றிருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இது தேர்வு எழுதிய மாணவ, மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் கேள்வி வினாத்தாள் தவறாக இருந்ததற்கு மாணவ மாணவிகள் பலரும் புகார் அளித்துள்ளனர். இது தவிர தவறாக கேட்கப்பட்ட இந்த கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.